குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : மடியின்மை.
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
Translation:
Though lords of earth unearned possessions
gain,
gain,
The slothful ones no yield of good obtain.
Explanation:
It is a rare thing for the idle, even when
possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any
great benefit from it.
possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any
great benefit from it.
கலைஞர் உரை:
தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.
[ads-post]
மு.வ உரை:
நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.
மணக்குடவர் உரை:
பூமியையுடைய வேந்தர் பலபொருளினாலும் அமைந்த விடத்தும் மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை. இது செல்வமுண்டாயினும் கெடுவரென்றது.
பரிமேலழகர் உரை:
படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் – நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்; மடி உடையார் மாண் பயன் எய்தல் அரிது – மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை. (‘உம்மை‘ எய்தாமை விளக்கி நின்றது. மாண்பயன் – பேரின்பம். அச்செல்வம், அழியாமல் காக்கும் முயற்சி இன்மையின் அழியும்; அழியவே, தம் துன்பம் நீங்காது என்பதாம். இதற்கு ‘நிலம் முழுதும் உடைய வேந்தர் துணையாதல் கூடிய இடத்தும்‘ என்று உரைப்பாரும் உளர்.)




