குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்லாமை.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
Translation:
Learning’s
irradiating grace who gain,
irradiating grace who gain,
Others
excel, as men the bestial train.
excel, as men the bestial train.
Explanation:
As
beasts by the side of men, so are other men by the side of those who are
learned in celebrated works.
beasts by the side of men, so are other men by the side of those who are
learned in celebrated works.
கலைஞர் உரை:
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.
[ads-post]
மு.வ உரை:
அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.
சாலமன் பாப்பையா உரை:
விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.
மணக்குடவர் உரை:
விலங்குச் சாதியோடும் மக்களோடும்
உள்ள வேறுபாடுடையர்; விளங்கின
நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர். இது கல்லாதார் விலங்கென்றது.
உள்ள வேறுபாடுடையர்; விளங்கின
நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர். இது கல்லாதார் விலங்கென்றது.
பரிமேலழகர் உரை:
விலங்கொடு மக்கள் அனையர் –
விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர்; இலங்கு நூல்
கற்றாரோடு ஏனையவர் – விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர். (இலங்குநூல்:
சாதிப் பெயர். விளங்குதல்: மேம்படுதல். விலங்கின்மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி
காணப்படுவது கற்றார்கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர்அல்லர் என்பதாம். மயக்க
நிரல் நிரை. இதனால்அவர் மக்கட்பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது.)
விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர்; இலங்கு நூல்
கற்றாரோடு ஏனையவர் – விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர். (இலங்குநூல்:
சாதிப் பெயர். விளங்குதல்: மேம்படுதல். விலங்கின்மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி
காணப்படுவது கற்றார்கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர்அல்லர் என்பதாம். மயக்க
நிரல் நிரை. இதனால்அவர் மக்கட்பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது.)




