HomeUncategorizedThirukural 1053 of 1330 - திருக்குறள் 1053 of 1330

Thirukural 1053 of 1330 – திருக்குறள் 1053 of 1330

Thirukural
1053 of 1330 –
திருக்குறள் 1053 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : இரவு.
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.
Translation:
The men who nought deny, but know what’s
due, before their face
To stand as suppliants affords especial
grace.
Explanation:
There is even a beauty in standing before
and begging of those who are liberal in their gifts and understand their duty
(to beggars).

கலைஞர் உரை:
உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்.

[ads-post]
மு. உரை:
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.
மணக்குடவர் உரை:
கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும் ஓரழகுடைத்து. இஃது ஒப்புரவறிவார் மாட்டு இரத்தலா மென்றது.
பரிமேலழகர் உரை:
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும்கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்; ஓர் ஏஎர் உடைத்துநல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து. (‘சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு‘ (குறள்-963) என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல், சொல்லுதலுற்று உரைக்கலாகாமைக்கு ஏதுவாய அதன் இயல்பினை அறிதல். அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே அமைதலின், ‘முன் நின்றுஎன்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், ‘ஓர் ஏஎருடைத்துஎன்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments