HomeUncategorizedThirukural 59 of 1330 - திருக்குறள் 59 of 1330

Thirukural 59 of 1330 – திருக்குறள் 59 of 1330

Thirukural
59 of 1330 –
திருக்குறள் 59 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால்.குறள் இயல் :
இல்லறவியல்.அதிகாரம் :
வாழ்க்கைத் துணைநலம்.
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
Translation:
Who
have not spouses that in virtue’s praise delight,
They
lion-like can never walk in scorner’s sight.
Explanation:
The
man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like
stately step, before those who revile them.
கலைஞர் உரை:
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.

[ads-post]

மு. உரை:
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.
மணக்குடவர் உரை:
புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. ஏறு நடைஅசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.
பரிமேலழகர் உரை:
புகழ் புரிந்த இல் இலோர்க்குபுகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லைதம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. (‘புரிந்தஎன்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், ‘ஏறுபோல்என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments