HomeUncategorizedThirukural 1149 of 1330 - திருக்குறள் 1149 of 1330

Thirukural 1149 of 1330 – திருக்குறள் 1149 of 1330

Thirukural
1149 of 1330 –
திருக்குறள் 1149 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : களவியல். அதிகாரம் : அலரறிவுறுத்தல்.
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
Translation:
When he who said ‘Fear not!’ hath left me
blamed,
While many shrink, can I from rumour hide
ashamed?.
Explanation:
When the departure of him who said
“fear not” has put me to shame before others, why need I be ashamed
of scandal.
கலைஞர் உரை:
உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?.

[ads-post]
மு. உரை:
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?.
சாலமன் பாப்பையா உரை:
அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?.
மணக்குடவர் உரை:
அலராகுமென்று நாணுதல் இயல்வதோ? அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து. பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை.
பரிமேலழகர் உரை:
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள். அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, ‘அலரஞ்சி ஆற்றல் வேண்டும்என்ற தோழிக்குச் சொல்லியது.) அஞ்சல் ஒம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடைதம்மை எதிர்ப்பட்ட ஞான்றுநின்னிற் பிரியேன் அஞ்சல் ஒம்புஎன்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாணா ஒல்வதோநாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது. (‘நாணஎன்னும் வினையெச்சம்ஒல்வது
என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. ‘கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல் யாண்டையது‘? என்பதாம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments