HomeUncategorizedThirukural 1227 of 1330 - திருக்குறள் 1227 of 1330

Thirukural 1227 of 1330 – திருக்குறள் 1227 of 1330

Thirukural
1227 of 1330 –
திருக்குறள் 1227 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : பொழுதுகண்டிரங்கல்.
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.
Translation:
My grief at morn a bud, all day an opening
flower,
Full-blown expands in evening hour.
Explanation:
This malady buds forth in the morning,
expands all day long and blossoms in the evening.
கலைஞர் உரை:
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.

[ads-post]
மு. உரை:
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.
மணக்குடவர் உரை:
இக்காம நோயாகிய பூ விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து மாலைக்காலத்தே மலரா நின்றது.
பரிமேலழகர் உரை:
(‘மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை‘? என்றாட்குச் சொல்லியது.) இந்நோய்இக்காமநோயாகிய பூ; காலை அரும்பிகாலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகிபகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து; மாலை மலரும்மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும். (துயிலெழுந்த பொழுதாகலின் கனவின்கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, ‘காலை அரும்பிஎன்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப்பகலெல்லாம் போதாகிஎன்றும் , தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றிமாலை மலரும்என்றும் கூறினாள். ‘பூப்போல இந்நோய் காலவயத்ததாகாநின்றதுஎன்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments