சீவக சிந்தாமணி 1946 – 1950 of 3145 பாடல்கள்
1946. கத்திகைக் கழுநீர் கமழ் கோதையர்
பத்தியில் படு சாந்து அணி வெம் முலை
சித்தியில் படர் சிந்தை யினாரையும்
இத் திசைப் படர் வித்திடு நீரவே
விளக்கவுரை :
1947. வஞ்சி வாட்டிய வாள் மின் நுசுப்பினார்
பஞ்சி ஊட்டிய பாடகச் சீறடி
குஞ்சி சூட்டிய மைந்தர் குழாம் அலால்
இஞ்சி வட்டம் இடம் பிறிது இல்லையே
விளக்கவுரை :
[ads-post]
1948. மின்னின் நீள் கடம்பின் நெடு வேள் கொலோ
மின்னும் ஐங்கணை வார் சிலை மைந்தனோ
என்னனோ அறியோம் உரையீர் எனாப்
பொன் அம் கொம்பு அனையார் புலம்பு எய்தினார்
விளக்கவுரை :
1949. விண் அகத்து இளையான் அன்ன மெய்ப் பொறி
அண்ணலைக் கழி மீன் கவர் புள் என
வண்ண வார் குழல் ஏழையர் வாள் நெடுங்
கண் எலாம் கவர்ந்து உண்டிடு கின்றவே
விளக்கவுரை :
1950. புலாத் தலைத் திகழும் வை வேல் பூங் கழல் காலி னானை
நிலாத் தலைத் திகழும் பைம் பூண் நிழல் மணி வடத்தோடு ஏந்திக்
குலாய்த் தலைக் கிடந்து மின்னும் குவி முலை பாய வெய்தாய்க்
கலாய்த் தொலைப் பருகுவார் போல் கன்னியர் துவன்றி னாரே
விளக்கவுரை :




