HomeUncategorizedThirukural 865 of 1330 - திருக்குறள் 865 of 1330

Thirukural 865 of 1330 – திருக்குறள் 865 of 1330

Thirukural
865 of 1330 –
திருக்குறள் 865 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பகைமாட்சி.
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
Translation:
No way of right he scans, no precepts bind,
no crimes affright,
No grace of good he owns; such man’s his
foes’ delight.
Explanation:
(A) pleasing (object) to his foes is he who
reads not moral works, does nothing that is enjoined by them cares not for
reproach and is not possessed of good qualities.
கலைஞர் உரை:
நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

[ads-post]
மு. உரை:
ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.
சாலமன் பாப்பையா உரை:
நீதி நூல்கள் சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.
மணக்குடவர் உரை:
ஒருவினை செய்யத்தொடங்குங்கால் பின் வருவன பாரான், பயன்படுவனவற்றைச் செய்யான், அதனால் உறும் பழியைப் பாரான், குணமுமிலன்; இவன் பகைமை பகைவர்க்கு இனிது. இஃது இவன் பகைமையால் பகைவர்க்கு இனிமை உண்டாமென்றது.
பரிமேலழகர் உரை:
வழிநோக்கான்ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான்அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழி நோக்கான்தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்புஇலன்தான் பண்புடையன் அல்லன்; பற்றார்க்கு இனிதுஅவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது. (தொல்லோர் அடிப்பட வழங்கி வந்ததாகலான்வழிஎன்றும் , தப்பாது பயன்படுதலின்வாய்ப்பனஎன்றும் , இக்குற்றங்களுடையான் தானே அழிதலின்பற்றார்க்கு இனிதுஎன்றும் கூறினார்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments