குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கண்ணோட்டம்.
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
Translation:
The
seeming eye of face gives no expressive light,
seeming eye of face gives no expressive light,
When
not with duly meted kindness bright.
not with duly meted kindness bright.
Explanation:
Beyond
appearing to be in the face, what good do they do, those eyes in which is no
well-regulated kindness ?.
appearing to be in the face, what good do they do, those eyes in which is no
well-regulated kindness ?.
கலைஞர் உரை:
அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.
[ads-post]
மு.வ உரை:
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?.
மணக்குடவர் உரை:
அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதலைச் செய்யாத கண்கள், முகத்தின்கண் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்? அளவென்றது தகுதியை. இது தனக்கும் பயன்படாதென்றது.
பரிமேலழகர் உரை:
முகத்து உளபோல் எவன் செய்யும் – கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்; அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் – அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள். (‘தோன்றல்‘, ‘அல்லது‘ என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு ‘அளவினான்‘ என்றார். ‘ஒரு பயனையும் செய்யா‘ என்பது குறிப்பெச்சம்.)




