joy is joy of all the world, they see; thus more
learners learn to love their cherished lore.
learned will long (for more learning), when they see that while it gives
pleasure to themselves, the world also derives pleasure from it.
நுகர்ந்து இன்புறுவாராகக் கண்டால் அதற்கு இன்புறுவர் கற்றறிந்தவர். இஃது அழுக்காறு
செய்யாது இன்புறுதல் அறமாதலின் அது கல்வியானே வருமென்றது.
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு – தாம் இன்புறுதற்கு
ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி, கற்றறிந்தார்
காமுறுவர் – கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர். (தாம் இன்புறுதலானது, நிகழ்வின்
கண் சொற்பொருள்களின் சுவை நுகர்வானும், புகழ்
பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு
பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம்
எய்துதல். உலகு இன்புறுதலாவது: ‘இம்மிக்காரோடு
தலைப்பெய்து அறியாதன எல்லாம் அறியப்பெற்றோம்‘ என்றும்
‘யாண்டு பலவாக நரையில
மாயினேம்‘ (புறநா. 191)
என்றும் உவத்தல். செல்வமாயின், ஈட்டல்
காத்தல் இழத்தல் என்ற இவற்றான் துன்புறுதலும், பலரையும்
பகை யாக்கலும் உடைத்து என அறிந்து, அதனைக்
காமுறாமையின் ‘கற்றறிந்தார்‘ என்றும், கரும்பு
அயிறற்குக் கூலிபோலத்தாம் இன்புறுதற்கு உலகு இன்புறுதல் பிறவாற்றான் இன்மையின்
அதனையே காமுறுவர் என்றும் கூறினார்.)




