மணிமேகலை 1241 – 1260 of 4856 அடிகள்
1241. பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும்
அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அருந் திறல்
மந்திரம் கொள்க’ என வாய்மையின் ஓதி
‘மதி நாள் முற்றிய மங்கலத் திருநாள்
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன்
திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி
விளக்கவுரை :
[ads-post]
1251. நின் ‘பதிப் புகுவாய்’ என்று எழுந்து ஓங்கி
‘மறந்ததும் உண்டு’ என மறித்து ஆங்கு இழிந்து
‘சிறந்த கொள்கைச் சேயிழை! கேளாய்
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்
இப் பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும்’ என்று
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து
நீங்கியது ஆங்கு நெடுந் தெய்வம் தான் என்
11. பாத்திரம் பெற்ற காதை
மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர்
மணிபல்லவத்திடை மணிமேகலை தான்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும்
விளக்கவுரை :




