மணிமேகலை 1621 – 1640 of 4856 அடிகள்
1621. புரி நூல் மார்பீர்! பொய் உரை ஆமோ?
சாலிக்கு உண்டோ தவறு?’ என உரைத்து
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப
“ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான்” என்றே
தாதை பூதியும் தன் மனை கடிதர
“ஆ கவர் கள்வன்” என்று அந்தணர் உறைதரும்
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்
தக்கண மதுரை தான் சென்று எய்தி
சிந்தா விளக்கின் செழுங் கலை நியமத்து
விளக்கவுரை :
[ads-post]
1631. அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத்
தங்கினன் வதிந்து அத் தக்கணப் பேர் ஊர்
ஐயக் கடிஞை கையின் ஏந்தி
மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி
‘காணார் கேளார் கால் முடப்பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
யாவரும் வருக’ என்று இசைத்து உடன் ஊட்டி
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து
கண்படைகொள்ளும் காவலன் தான் என்
14. பாத்திர மரபு கூறிய காதை
‘ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பலப் பீடிகை
விளக்கவுரை :




