HomeUncategorizedதிருமூலர் திருமந்திரம் 236 - 240 of 3047 பாடல்கள்

திருமூலர் திருமந்திரம் 236 – 240 of 3047 பாடல்கள்


திருமூலர் திருமந்திரம் 236 – 240 of 3047 பாடல்கள்

thirumoolar-thirumanthiram

236. ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்குந் திருவுடை யோரே.
விளக்கவுரை :
237. தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓர்ஆ குதிஅவி உண்ணவே.
விளக்கவுரை :

[ads-post]

13. அரசாட்சி முறை (இராச தோடம்)
238. கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான்
கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகநில் லானே.
விளக்கவுரை :
239. நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே.
விளக்கவுரை :
240. வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை
விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாமே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments