பொங்கமுட னாகாச மாடனோது
கூடப்பா லட்சமுரு செபித்துப் போடு
குணமான மந்திரந்தான் சொல்லக் கேளு
நடப்பா ஓம் … நமோ … பகவதே
நலமாக ஓம் … பாடு … சுவாஹா வென்று
ஆமப்பா பூசைபலி பலக்கச் செய்து
அடைவாக மந்திரந்தான் ஓதக் கேனே.
விளக்கவுரை :
தீயில் எழுதிப் போடும்போது அந்த எதிரியின் பெயரை அதன் கீழே எழுதிப் போடவும். பின்னர் ஆகாச மாடனை நினைத்து இலட்சம் தடவைகள் செபிக்க வேண்டும். செபிக்கவேண்டிய மந்திரத்தை கூறுகிறேன் கேட்பாயாக. “ஓம்… . நமோ … பகவதே … ஓம் … பாடு … சுவாஹா … ” என்று ஓத வேண்டும். அதற்க்கு முன்னர் காரியம் பலிக்க பூசை செய்து, பலி கொடுத்து மந்திரத்தை ஓதவேண்டும்.
கெணிதமாய் மந்திரத்தை எழுதிப் போடு
சூளடா வெதிரியுட பேரை நாட்டுஞ்
சுகமான வைங்காயங் கோலஞ் சேர்த்து
ஆளடா சுடலையுட கருவுங் கூட்டி
அப்பனே மத்தித்துத் தகட்டிற் பூசி
வாளடா பூசைபலி பலக்கச் செய்து
வளமாக மாடனைத்தான் தியான மோதே.
விளக்கவுரை :
113. ஓதியே மாடனைத்தான் கட்டிக் கொண்டு
ஒளிவான வாகாச மாடா நீயும்
வாதியாக் கல்லிந்தா விந்தா வென்று
வகையாகச் சொல்லுயபின் கல்லுதானும்
ஆதியாற் றகட்டின்மேல் வைத்தா யானால்
அப்பனே கல்லதுவு மளவிராது
பாதியே யொருகோடி பூதமெல்லாம்
பார்த்திருக்கத் தானெறியுங் கல்லு தானே.
விளக்கவுரை :
114. தானேதான் மண்ணெடுத்துச் சாலை கற்கள்
தயவாக மாட்டெலும்பு செங்கல் மூட்டை
மானேதான் நவபாண்ட மரிசு யுப்பு
மணமான மிளகு பொடி தீட்டுச்சீலை
வானேதான் குப்பையொடு கண்டதெல்லாம்
வாரியே தானெரிவு மில்லந் தன்னில்
கோனதா னெதிரிபோ மிடங்களெல்லாம்
கொற்றவனே யவனுடனே போகும் பாரே.
விளக்கவுரை :
115. பாரடா சத்துருவும் வணங்கி வந்தால்
பண்பான மாடனைநீ யழித்துப் போடு
வீரடா மாடாநீ கல்லைத் தானும்
விதமாகத் தாவென்று யெடுத்துப் போடு
தீரடா சாணமிட்டு மெழுகிப் போடு
திறமாகச் சக்கரத்தைக் கழுவு வாய்நீ
கூறடா ஜலந்தனிலே விட்டுப் போடு
குணமாக மாடனைத்தான் பூசை செய்யே.




