HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1551 - 1555 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1551 – 1555 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1551 – 1555 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1551. பூட்டினே னின்னமொரு
கருமானங்கேள் புகழான ரத்தமென்ற பாளந்தானும்
மூட்டினேன் கார்போக
வரிசிதானும் முக்கியமாம் வாலுழுவை யரிசிதானும்
தாட்டிகமாம் நீலமென்ற
கூகைநீறும் தாக்கான பன்னீரா லரைத்துமைந்தா
நீட்டமுடன் பாண்டத்தில்
லிடித்துப்போடு நேர்ப்பாக பூமிதனில் புதைத்திடாயே
விளக்கவுரை :
1552. புதைத்தவுடன் நீரெல்லாம்
சுண்டவேதான் பொங்கமுடன் கருநிறமாயிருக்கும்பாரு
சிதைத்துமே நாசிதனில்
முகந்திட்டாக்கால் திக்காடுஞ் சுவாசமது திணறிக்காட்டும்
பதைத்துமே மேனியது
சிலிர்ப்புகாணும் படுஞ்சுலுக்கு கஸ்தூரி சொல்லப்போமோ
மிதத்துடனே மருந்துகளில்
சேர்க்கவேண்டும் மிக்கான போகருட வைப்புதானே
விளக்கவுரை :

[ads-post]
1553. வைப்பான மின்னமொரு
மார்க்கங்கேளு மகத்தான கமலமுனி சொன்னமார்க்கம்
வைப்பான காசியென்ற
கட்டிதானும் வாகான கருவாயின்பட்டைதானும்
வைப்பான வவிரியுட
சார்தான்கூட்டி வளமான வொட்டகத்தின் வுதிரந்தானும்
வைப்பான சரக்குடனே
வுதிரவேங்கை வளமுடனே தான்சேர்த்து வரைத்திடாயே
விளக்கவுரை :
1554. அரைக்கவே
பன்னீராலரைக்கவேண்டும் அப்பனே சாடிதனில் பொதியவேண்டும்
திரைக்கவே பூமிதனில்
புதைக்கவேண்டும் திகழான மண்டலந்தான் சென்றபின்பு
நிறைக்கவே
குழிதோண்டியெடுத்துப்பாரு யென்மகனே கஸ்தூரி யென்னசொல்வேன்
பரைக்கவே ராசரிடம் சென்றுமேதான்
பாங்குடனே வெற்றியது பெறலாம்பாரே
விளக்கவுரை :
1555. பாரேதான் வயமதுவும்
பலம்பத்தாகும் பாங்கான தாளகமும் பலமைந்தாகும்
சீரேதான்
யெரிகாலான்பாலாலாட்டி சிறப்புடனே வெண்காரம் பொரித்துப்போடு
கூரேதான் வச்சிரமாங்
குகைதனில்வைத்து குமுறவே மேல்மூடிசீலைசெய்து
நேரேதான் சரவுலையில்
வைத்துவூது நேர்ப்பான களங்கமது சொல்லொண்ணாதே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments