HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 281 - 285 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 281 – 285 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 281 – 285 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

281. ஜெயமான உலகத்தில் லகிரி
உண்டு தீர்க்கமாய் முதிர்ந்தபின்பு உன்னுளக்கிரி
மயமான மகாரத்தால்
வந்துதாக்கும் மகாரத்தைக் கூட்டையிலே அறிந்து கூடு
குயமான கும்மென்ற ஞானத்தில்
கூடு குறியோடே அறிவென்ற மவுனத்தை நாட்டு
நயமான நாதத்தின் ஆட்டங்கேளு
நலங்காமல் ஒருவழியே நாட்டிடாயே
விளக்கவுரை :
282. நாடினால் சன்னமது
முத்தியாகும் நலமாக யேறுதற்கு வழியைக்கேளு
வாடினால் மூலத்தில்
வாசிவைத்து வழியோடே பிராணயாமம் பண்ணத்தீரும்
கூடினால் குண்டலிக்கும்
நடனங்கண்டு கொடிதான வாதித்த னொளியைக்காணும்
ஆடினால் கண்டத்தில்
வங்கென்றூனு ஆடாத வழிதிறக்கா வழிசெல்வாமே
விளக்கவுரை :

[ads-post]
283. செவ்வையாய் நின்றுரைத்த
பழக்கமானால் சிறப்பான மனோன்மணிதான் புருவமையத்தே
மவ்வையாம் ஒளியோடே
மவுனத்தைப்பூணு மகத்தான சாம்பவியைக் கண்டுகொள்வாய்
நெவ்வையாம் இவ்வளவும்
யோகமார்க்கம் நின்றல்லோ சிவயோகி நிலைத்துக்காணும்
தவ்வையாம் விந்துவென்ற
குருபதத்தில் தாக்கவே மவுனத்தைத் தாரையாமே
விளக்கவுரை :
284. தாரையாம் அஷ்டாங்கம்
சாற்றக்கேளு தனித்தனியே ஒவ்வொன்றாய் விரித்துச்சொல்வேன்
நேரையாம் சாட்டியமாம்
நித்திரையும் போக்கு நியமமாய் சதாநித்தம் தாரகத்தில் நில்லு
தூரையாம் மனம்குவிந்து
கேசரியைப்பாரு சோமப்பால் கசிந்தோடும் கேசரியைக்கண்டால்
காரையாம் ரவிமதியும்
வன்னிகூடி கலந்துநின்ற இடமல்லோ கேசரிதான்காணே
விளக்கவுரை :
285. காணவே ஏமமொடு நேமமாகும்
கருதியதோர் ஆசனமும் பிராணயாமம்
பூணவே பிரத்தியாகாரம்
தாரனையினொடு பெருமையாம் தியானமொடு சமாதியாகும்
ஏனவே இதுவெல்லாம் எட்டெயங்கு
மிகையான சித்தாந்தம் வேதாந்தமிரண்டும்
ஆனவே அடமெல்லாம் சொல்லக்கேளு
அறிந்துகொள்ளும் நிரைநிரையாய் அறிவில்தானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments