HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4226 - 4230 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4226 – 4230 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4226 – 4230 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4226. போடவே கற்பாறைமூடிப்பின்பு
பொங்கமுடன் சமாதியுடன் நிற்கவேண்டும் 
நீடவே
நான்வருகுங்காலந்தன்னில் நிலையான பாறைதனில் எழுத்துதோன்றும்
கூடவே வாண்டுவது
பத்துக்குள்ளே கொப்பெனவே யான்வருகுங்காலந்தன்னில்
சாடவே நர்மதா மலைதானப்பா
சட்டமுடன் தங்கநிறமாகும்பாரே
விளக்கவுரை :
4227. தங்கமாம் அதிலிருக்கும்
சித்தரெல்லாம் சட்டமுடன் மலையைவிட்டுக் கீழிறங்கி
அங்கமுடன் அஞ்சலிகள்
மிகவுஞ்செய்து வன்புடனே சமாதியிடம் வந்துநிற்பார்
புங்கசித்தி எட்டுமது
பூண்டுகொண்டு புகழான யோகமென்ற ஞானம்கொண்டு
சங்கமென்ற ஞானோபதேசத்தோடும்
சார்புடனே சமாதியிடம் நிற்பார்பாரே
விளக்கவுரை :

[ads-post]
4228. பார்க்கவென்றால்
இன்னம்வெகுவதிசயங்கக் பாருலகில் தானடக்கும் மகிமைசொல்வேன்
தீர்க்கமுடன்
வடகோடியாறுதானும் திகழுடனே தென்திசையிலிருந்துமல்லோ
மூர்க்கமுடன் வடகோடி
கானகத்தில் முத்தமுடன் கான்பாபுவென்றுசொன்னார்
ஏர்க்கவே காணாறுநதிகளெல்லாம்
எழிலுடனே இப்படியே நடக்குந்தானே
விளக்கவுரை :
4229. தானான சித்துமுனி
ரிஷிகளெல்லாம் தண்மையுடன் சமாதியுட பக்கல்வந்து
கோனான எனதையர்
அகஸ்தியர்தம்மை கொற்றவனார் குருபதத்தை தாம்நினைத்து
தேனான சித்தர்முனி வருவதற்கோ
தேசமெல்லாங் கண்டுமனங்களிப்பதெப்போ
பானான சமாதியது பாறைதானும்
பாருலகில் வெடிப்பதெப்போ வென்றிட்டாரே  
விளக்கவுரை :
4230. இட்டதொரு காலமது சென்றபின்பு
எழிலான சித்துவரும் நாளுமாச்சு
சட்டமுடன் மலைகளெல்லாம்
தங்கமாச்சு சார்பான பாறையின்மேல் எழுத்துண்டாச்சு
குஷ்டமுடன் நோயுள்ள
பிணியோரெல்லாம் குறைநோயுந்தீர்ந்துமல்லோ குசலமானார்
திட்டமுடன்
சீஷவர்க்கமானோரெல்லாம் சிறப்புடனே சமாதியிடம் இருந்தார்பாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments