HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4386 - 4390 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4386 – 4390 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4386 – 4390 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4386. தானான போகரிஷி நாதாகேளும்
தாரிணியிலிருப்பதில் பலனொன்றில்லை
தேனான மனோன்மணியாள்
கிருபையாலே தேற்றமுட னுகாந்தவரை யதிசயங்கள்
கோனான குருசொன்ன
வாக்கியம்போல் குவலயத்தி லனேகவித்தை யானுங்கண்டேன்
பானான பாருலகில்
இருந்துமென்ன பாரைவிட்டு நீங்குவது நலமென்றாரே
விளக்கவுரை :
4387. நலமான வார்த்தையது
மிகவுங்கூறி நன்மையுடன் கடுவெளியார் சித்துதாமும்
பலமான தேகமதை நம்பொண்ணாது
பாரினிலே இருந்தவர்கள் யாருமில்லை
குலமான பதியைவிட்டு
சிலதுகாலம் கொற்றவனே சாதிதனிலிருப்பேனென்று
தலமுடனே கடுவெளியார்
சித்துதாமும் சட்டமுடன் போகரிஷிக்குரைத்திட்டாரே
விளக்கவுரை :

[ads-post]
4388. உரைக்கவே சமாதிசென்று
வருகுமட்டும் உத்தமனே நீயுமல்லோ வன்புகூர்ந்து
திரைக்கவே சமாதிவிட்டு
வருகும்போது தீர்க்கமுடன் உந்தனையும் காணலாகும்
குறையகற்றி யுந்தனுக்கு
வாசீர்மங்கள் குறையாமல் மனதுவந்து கூறுவேன்யான்
வரையாது வாக்கதுவும்
பொய்யாமற்றான் வன்மையுடன் உந்தனுக்கு போதிப்பேனே
விளக்கவுரை :
4389. போகித்து கடுவெளியார் சித்துதாமும் பொங்கமுடன் சீடருக்குத் தாமுரைத்து
ஆதித்தன் வந்துதிக்கும்
வேலைதன்னில் வன்பான சமாதியிட பக்கல்சென்று
வாதித்து சீடருடன்
விடையும்பெற்று வளமான குழிதனிலே இறங்கியல்லோ
பேதித்து பாறைதன்னை
சீடருக்கு பிரியமுடன் மூடவென்று விடைதந்தாரே
விளக்கவுரை :
4390. தந்தாரே
சித்துமகாரிஷியாசர்தாமும் தகமையுடன் சீஷவர்க்கமானபேர்க்கு
விந்தைதனை மிகவுரைத்து
சித்துதாமும் விருப்பமுடன் சீடருக்கு வதிதஞ்சொல்லி
அந்தமுடன்
நான்வருகுங்காலந்தன்னில் அதிசயங்கள் மிகநடக்குமென்றுசொல்லி
சிந்தனையாய்த்தாமுரைத்து
மண்ணிற்சென்று சிறப்பான அசரீரிகூறுவாரே   
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments