HomeUncategorizedThirukural 1021 of 1330 - திருக்குறள் 1021 of 1330

Thirukural 1021 of 1330 – திருக்குறள் 1021 of 1330

Thirukural
1021 of 1330 –
திருக்குறள் 1021 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : குடிசெயல்வகை.
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
Translation:
Who says ‘I’ll do my work, nor slack my
hand’,
His greatness, clothed with dignity
supreme, shall stand.
Explanation:
There is no higher greatness than that of
one saying. I will not cease in my effort (to raise my family).
கலைஞர் உரை:
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.

[ads-post]
மு. உரை:
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.
மணக்குடவர் உரை:
ஒருவன் கருமஞ்செய்தற்கு நான் ஒழியே னென்று சொல்லுகின்ற பெருமைபோலப் பெருமையுடையது பிறிது இல்லை.
பரிமேலழகர் உரை:
கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின்தன் குடிசெய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணிய கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப்பெருமை போல; ஒருவன் பீடு உடையது இல்ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிது இல்லை. (‘குடி செயற்குஎன்பது அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமச்செயலாற் செல்வமும் புகழும் எய்திக் குடி உயரும் ஆகலின், ‘பீடுடையது இல்என்றார். குடிசெய்தற் கருமமே நடத்தலால்தன் கருமஞ் செய்யஎன்றும், ‘பிறர் கருமஞ் செய்யஎன்றும் உரைப்பாரும் உளர். தன் கருமமும் அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல் தலைமை யன்மையானும் அவை உரையன்மை அறிக.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments