குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : குடிசெயல்வகை.
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
Translation:
Wait for no season, when you would your
house uprear;
house uprear;
‘Twill perish, if you wait supine, or hold
your honour dear.
your honour dear.
Explanation:
As a family suffers by (one’s) indolence
and false dignity there is to be so season (good or bad) to those who strive to
raise their family.
and false dignity there is to be so season (good or bad) to those who strive to
raise their family.
கலைஞர் உரை:
தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்.
[ads-post]
மு.வ உரை:
குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.
மணக்குடவர் உரை:
குடியோம்புவார்க்குப் பருவம் இல்லை; தம் குடும்பத்தின் குறையை நினைத்து மடிசெய்து அதனை உயர்த்துவதனாலுள தாகும் குற்றத்தை நினைக்கக் குடிகெடும் ஆதலான். இது குடிசெய்வார் இன்பநுகர்ச்சியை விரும்பாரென்றது.
பரிமேலழகர் உரை:
மடி செய்து மானம் கருதக் கெடும் – தம் குடியினை உயரச்செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்துகொண்டு மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம் இல்லை – ஆகலான் அவர்க்குக் கால நியதி இல்லை. (காலத்தை நோக்கி மடி செய்தல் – வெயில் மழை பனி என்பன உடைமை நோக்கிப் ‘பின்னர்ச் செய்தும்‘ என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல் – இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ? என்று உட்கோடல். மேல் ‘இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது‘ (குறள்-481) என்றது உட்கொண்டு, ‘இவர்க்கும் வேண்டுமோ?’ என்று கருதினும் ‘அது கருதற்க‘ என்று மறுத்தவாறு.)




