HomeUncategorizedThirukural 1063 of 1330 - திருக்குறள் 1063 of 1330

Thirukural 1063 of 1330 – திருக்குறள் 1063 of 1330

Thirukural
1063 of 1330 –
திருக்குறள் 1063 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : இரவச்சம்.
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
Translation:      
Nothing is harder than the hardness that
will say,
‘The plague of penury by asking alms we’ll
drive away’.
Explanation:
There is no greater folly than the boldness
with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by
working).

கலைஞர் உரை:
வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.

[ads-post]
மு. உரை:
வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.
மணக்குடவர் உரை:
வறுமையாலுற்ற துன்பத்தைப் பிறர்மாட்டு இரந்து பெற்ற பொருளினாலே தீர்ப்பே மென்று கருதுகின்ற வன்மைபோல, வன்பாயிருப்பது பிறிது இல்லை. இஃது இரந்தாலும் நல்குரவு தீரா தென்றது.
பரிமேலழகர் உரை:
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின்வறுமையான் வருந்துன்பத்தை முயன்று நீக்கக்கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல; வன்பாட்டது இல்வலிமைப்பாடுடையது பிறிது இல்லை. (நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவான் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று, வன்பாடுமுருட்டுத் தன்மை அஃதாவது, ஓராது செய்து நிற்றல். இதனான்வறுமை தீர்த்தற்கு நெறி இரவன்றுஎன்பது கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments