HomeUncategorizedThirukural 1171 of 1330 - திருக்குறள் 1171 of 1330

Thirukural 1171 of 1330 – திருக்குறள் 1171 of 1330

Thirukural
1171 of 1330 –
திருக்குறள் 1171 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : கண்விதுப்பழிதல்.
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
Translation:
They showed me him, and then my endless
pain
I saw: why then should weeping eyes
complain?.
Explanation:
As this incurable malady has been caused by
my eyes which showed (him) to me, why should they now weep for (him).
கலைஞர் உரை:
கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?.

[ads-post]
மு. உரை:
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.
சாலமன் பாப்பையா உரை:
தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?.
மணக்குடவர் உரை:
அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி? இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது.
பரிமேலழகர் உரை:
(நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும், என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்டஇத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் கலுழ்வது எவன் கொல்அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி? (‘காட்டஎன்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. ‘இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது‘? என்பதாம்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments