குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : அவர்வயின்விதும்பல்.
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
Translation:
O thou with gleaming jewels decked, could I
forget for this one day,
forget for this one day,
Henceforth these bracelets from my arms
will slip, my beauty worn away.
will slip, my beauty worn away.
Explanation:
O you bright-jewelled maid, if I forget
(him) today, my shoulders will lose their beauty even in the other life and
make my bracelets loose.
(him) today, my shoulders will lose their beauty even in the other life and
make my bracelets loose.
கலைஞர் உரை:
காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.
[ads-post]
மு.வ உரை:
தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.
மணக்குடவர் உரை:
இலங்கிய இழையையுடையவளே! யான் இன்று அவரை மறப்பேனாயின் பண்டை மெல்லிய என்னுடைய தோள்கள் தம்மழகினை நீக்கி வளை முதலான அணிகலங்களையும் கழலவிடும். இலங்கிழாய் என்றவதனால் வருத்தமில்லாதவளே என்று விளித்தாளென்பது கொள்ளப்படும்.
பரிமேலழகர் உரை:
(ஆற்றாமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலை யல்லை; சிறிது மறக்கல் வேண்டும், என்ற தோழிக்குச் சொல்லியது.) இலங்கு இழாய் – விளங்காநின்ற இழையினை யுடையாய்; இன்று மறப்பின் – காதலரை இன்று யான் மறப்பேனாயின்; மேல் காரிகை நீத்து என்தோள் கலங்கழியும் – மேலும் காரிகை என்னை நீப்ப என் தோள்கள் வளை கழல்வனவாம். (‘இலங்கிழாய்‘ என்பது ‘இதற்கு நீ யாதும் பரியலை‘ என்னும் குறிப்பிற்று. இன்று – யான் இறந்துபடுகின்ற இன்று. மேலும் – மறுபிறப்பினும். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. ‘நீப்ப‘ என்பது , ‘நீத்து‘ எனத் திரிந்து நின்றது. கழியும் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. ‘இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை எய்தி இன்புறலாம், அதனான் மறக்கற்பாலேன் அல்லேன‘,என்பதாம்.).




