HomeUncategorizedThirukural 1301 of 1330 - திருக்குறள் 1301 of 1330

Thirukural 1301 of 1330 – திருக்குறள் 1301 of 1330

Thirukural
1301 of 1330 –
திருக்குறள் 1301 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : புலவி.
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
Translation:
Be still reserved, decline his profferred
love;
A little while his sore distress we ‘ll
prove.
Explanation:
Let us witness awhile his keen suffering;
just feign dislike and embrace him not.
கலைஞர் உரை:
ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.

[ads-post]
மு. உரை:
(ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.
சாலமன் பாப்பையா உரை:
நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.
மணக்குடவர் உரை:
நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலத்தல் வேண்டும்: அவ்விடத்து அவருறும் கலக்கத்தை யாம் சிறிது காண்பேமாக. இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறிப்புக் கண்டு முகங்கொடாமைப் பொருட்டு இனிமை கூறியது.
பரிமேலழகர் உரை:

(
வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.) அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம்அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக்கடவோம்; புல்லாது இராப் புலத்தைநீ அவரை விரைந்து சென்று புல்லாதே; இத்தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக. (அல்லல் நோய்துன்பத்தைச் செய்யும் காமநோய். ‘சிறிதுஎன்றாள், புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. ‘புலத்தைஎன்புழி ஐகாரம்கடம்பூண்டொருகால் நீ வந்தை‘ (கலித்.குறிஞ்சி.27) என்புழிப்போல, முன்னிலை வினை விகுதி. ‘புலத்திஎன்பதூஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள் வழியளாய் நின்று, ‘நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்என நகையாடி நேர்வித்தவாறு.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments