HomeUncategorizedThirukural 39 of 1330 - திருக்குறள் 39 of 1330

Thirukural 39 of 1330 – திருக்குறள் 39 of 1330

Thirukural
39 of 1330 –
திருக்குறள் 39 of 1330

thirukural

குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
பாயிரவியல். அதிகாரம் :
அறன்வலியுறுத்தல்.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
Translation:
What from virtue floweth, yieldeth dear
delight;
All else extern, is void of glory’s light.
Explanation:
Only that pleasure which flows from
domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without
praise.
கலைஞர் உரை:
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

[ads-post]

மு. உரை:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
சாலமன் பாப்பையா உரை:
அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.
மணக்குடவர் உரை:
அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம். இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.
பரிமேலழகர் உரை:
அறத்தான் வருவதே இன்பம்இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்தஅதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இலஅதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல. (‘ஆன்உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, ‘தூங்கு கையான் ஓங்கு நடைய‘ (புறநா.22) என்புழிப்போல. இன்பம்காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும்பிறனில் விழைவுமுதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின்புறத்தஎன்றார். அறத்தோடு வாராதனபுகழும் இலஎனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.).


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments