குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : தெரிந்துவினையாடல்.
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
Who
swells the revenues, spreads plenty o’er the land,
swells the revenues, spreads plenty o’er the land,
Seeks
out what hinders progress, his the workman’s hand.
out what hinders progress, his the workman’s hand.
Explanation:
Let
him do (the king’s) work who can enlarge the sources (of revenue), increase
wealth and considerately prevent the accidents (which would destroy it).
him do (the king’s) work who can enlarge the sources (of revenue), increase
wealth and considerately prevent the accidents (which would destroy it).
கலைஞர் உரை:
வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.
[ads-post]
மு.வ உரை:
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.
மணக்குடவர் உரை:
பொருள் வருதற்கு இடமானவற்றை முன்பு நின்ற நிலையிற் பெருக்கி, அவ்விடங்களி லுண்டாகும் பயனை முன்பு நின்ற நிலையிலுண்டாக்கி, அவ்விடத்துற்ற மிகுதி குறைவுகளை ஆராயவல்லவன் வினை செய்வானாக. பொருள் வருதற்கிடமாவது நிலம் முதலான இடம்: அதனைப் பெருக்குதல்– பொருளும் இன்பமும் உண்டாகச் செய்தல்.
பரிமேலழகர் உரை:
வாரி பெருக்கி – பொருள்வரு வாயில்களை விரியச் செய்து, வளம் படுத்து – அப்பொருளால் செல்வங்களை வளர்த்து, உற்றவை ஆராய்வான் –அவ் வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன், வினைசெய்க – அரசனுக்கு வினை செய்க. (வாயில்களாவன: மேல் இறை மாட்சியுள் ‘இயற்றலும் ‘ (குறள்,385) என்புழி உரைத்தனவும், உழவு,பசுக்காவல், வாணிகம் என்னும் வார்த்தையுமாம். செல்வங்களாவன. ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. இடையூறுகளாவன: அரசன், வினை செய்வார், சுற்றத்தார்,பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.)




