குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : மடியின்மை.
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
Translation:
His family decays, and faults unheeded
thrive,
thrive,
Who, sunk in sloth, for noble objects doth
not strive.
not strive.
Explanation:
Family (greatness) will be destroyed, and
faults will increase, in those men who give way to laziness, and put forth no
dignified exertions.
faults will increase, in those men who give way to laziness, and put forth no
dignified exertions.
கலைஞர் உரை:
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.
[ads-post]
மு.வ உரை:
சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.
சாலமன் பாப்பையா உரை:
சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.
மணக்குடவர் உரை:
குடியுங் கெட்டுக் குற்றமும் மிகும்; சோம்பின்கண்ணே பொருந்தி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு. இது பிறாரால் இகழப்படுவ ரென்றது.
பரிமேலழகர் உரை:
மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு – மடியின்கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; குடி மடிந்து குற்றம் பெருகும் – குடியும் மடிந்து குற்றமும் பல்கும். (‘மடிந்து‘ எனத் திரிந்து நின்ற வினையெச்சம் ‘இலவர்‘ என்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க் கூறுப. இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.)




