HomeUncategorizedThirukural 675 of 1330 - திருக்குறள் 675 of 1330

Thirukural 675 of 1330 – திருக்குறள் 675 of 1330

Thirukural
675 of 1330 –
திருக்குறள் 675 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைசெயல்வகை.
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
Translation:
Treasure and instrument and time and deed
and place of act:
These five, till every doubt remove, think
o’er with care exact.
Explanation:
Do an act after a due consideration of the
(following) five, viz. money, means, time, execution and place.
கலைஞர் உரை:
ஒரு காரியத்தில் .டுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

[ads-post]
மு. உரை:
வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம்,
செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.
மணக்குடவர் உரை:
பொருளும், கருவியும், காலமும், வினையும்
வினைசெய்யும் இடமுமென்னும் ஐந்தினையும் மயக்கந்தீர எண்ணிப் பின்பு வினைசெயத்
தொடங்குக
.
பரிமேலழகர் உரை:
பொருள் கருவி காலம் வினை இடனொடு
ஐந்தும்
வினைசெய்யுமிடத்துப்
பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும்
; இருள் தீர
எண்ணிச் செயல்
மயக்கம்
அற எண்ணிச் செய்க
. (எண்ணொடு, பிறவழியும்
கூட்டப்பட்டது
. பொருள்அழியும் பொருளும்
ஆகும் பொருளும்
. கருவிதன்தானையும்
மாற்றார் தானையும்
. காலம்தனக்கு ஆகுங்
காலமும் அவர்க்கு ஆகுங் காலமும்
. வினை
தான் வல்ல வினையும் அவர் வல்ல வினையும். இடம்தான் வெல்லும் இடமும் அவர் வெல்லும் இடமும். இவற்றைத் தான்
வெற்றியெய்தும் திறத்தில் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments