குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : தூது.
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
Translation:
Benevolence high birth, the courtesy kings
love:-
love:-
These qualities the envoy of a king
approve.
approve.
Explanation:
The qualification of an ambassador are
affection (for his relations) a fitting birth, and the possession of attributes
pleasing to royalty.
affection (for his relations) a fitting birth, and the possession of attributes
pleasing to royalty.
கலைஞர் உரை:
அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.
[ads-post]
மு.வ உரை:
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
சாலமன் பாப்பையா உரை:
நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.
மணக்குடவர் உரை:
அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த
குடியின்கண் பிறத்தலும், வேந்தனால்
விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம். வேந்தனால்
விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை.
குடியின்கண் பிறத்தலும், வேந்தனால்
விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம். வேந்தனால்
விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை.
பரிமேலழகர் உரை:
அன்பு உடைமை – தன்
சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் – அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண்
பிறத்தலும்; வேந்து
அவாம் பண்பு உடைமை – அரசர்
சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு – தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம். (முன்னைய
இரண்டனாலும், முறையே
சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர்
தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண்
பெறப்படும். அதனால்
வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.)
சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் – அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண்
பிறத்தலும்; வேந்து
அவாம் பண்பு உடைமை – அரசர்
சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு – தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம். (முன்னைய
இரண்டனாலும், முறையே
சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர்
தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண்
பெறப்படும். அதனால்
வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.)




