குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : மன்னரைச் சேர்ந்தொழுதல்.
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
Translation:
Who think ‘We’re ancient friends’ and do
unseemly things;
unseemly things;
To these familiarity sure ruin brings.
Explanation:
The (foolish) claim with which a minister
does unbecoming acts because of his (long) familiarity (with the king) will
ensure his ruin.
does unbecoming acts because of his (long) familiarity (with the king) will
ensure his ruin.
கலைஞர் உரை:
நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.
[ads-post]
மு.வ உரை:
யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.
மணக்குடவர் உரை:
யாம் பழைமையுடையோ மென்று கருதி
இயல்பல்லாதனவற்றைச் செய்யும் நட்பின்தகைமை தமக்குக் கேட்டைத்தரும் இது பின்
பகையானவற்றைத் தவிரல் வேண்டும்மென்றது.
இயல்பல்லாதனவற்றைச் செய்யும் நட்பின்தகைமை தமக்குக் கேட்டைத்தரும் இது பின்
பகையானவற்றைத் தவிரல் வேண்டும்மென்றது.
பரிமேலழகர் உரை:
பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல
செய்யும் கெழுதகைமை – அரசனுக்கு
யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை; கேடு தரும் – அமைச்சர்க்குக்
கேட்டினைப் பயக்கும். (அவன்
பொறாது செறும் பொழுதின், அப்பழைமை
நோக்கிக் கண்ணோடாது உயிரை வௌவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை கேடு தரும்
என்றார். இவை
மூன்று பாட்டானும், பொறுப்பர்
என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.)
செய்யும் கெழுதகைமை – அரசனுக்கு
யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை; கேடு தரும் – அமைச்சர்க்குக்
கேட்டினைப் பயக்கும். (அவன்
பொறாது செறும் பொழுதின், அப்பழைமை
நோக்கிக் கண்ணோடாது உயிரை வௌவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை கேடு தரும்
என்றார். இவை
மூன்று பாட்டானும், பொறுப்பர்
என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.)




