HomeUncategorizedThirukural 754 of 1330 - திருக்குறள் 754 of 1330

Thirukural 754 of 1330 – திருக்குறள் 754 of 1330

Thirukural
754 of 1330 –
திருக்குறள் 754 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : கூழியல். அதிகாரம் : பொருள்செயல்வகை.
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
Translation:
Their wealth, who blameless means can use
aright,
Is source of virtue and of choice delight.
Explanation:
The wealth acquired with a knowledge of the
proper means and without foul practices will yield virtue and happiness.
கலைஞர் உரை:
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.

[ads-post]
மு. உரை:
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும்.
மணக்குடவர் உரை:
அறத்தையும் தரும்: இன்பதையும் தரும்: பொருள் வருந்திறமறிந்து பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள். இது பொருளால் கொள்ளும் பயன் அறஞ்செய்தலும் இன்பம் நுகர்தலும் அன்றே: அவ்விரண்டினையும் பயப்பது நியாயமாகத் தேடியபொருளாமாதலின் என்றது.
பரிமேலழகர் உரை:
திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள்செய்யும் திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மையிலனாக உளதாய பொருள்; அறன் ஈனும் இன்பமும் ஈனும்அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும். (செய்யுந்திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி. ‘இலனாகஎன்றதுஇன்றிஎனத் திரிந்து நின்றது. ‘செங்கோல்என்று புகழப்படுதலானும், கடவுட்பூசை தானங்களாற் பயனெய்தலானும், ‘அறன் ஈனும்என்றும், நெடுங்காலம் நின்று துய்க்கப்படுதலான், ‘இன்பமும் ஈனும்என்றும் கூறினார். அதனான் அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments