குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பழைமை.
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
Translation:
Waters True friends, well versed in loving
ways,
ways,
Cease not to love, when friend their love
betrays.
betrays.
Explanation:
Those who have (long) stood in the path of
affection will not give it up even if their friends cause (them) their ruin.
affection will not give it up even if their friends cause (them) their ruin.
கலைஞர் உரை:
தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்.
[ads-post]
மு.வ உரை:
அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.
சாலமன் பாப்பையா உரை:
தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டுவிடமாட்டார்.
மணக்குடவர் உரை:
தமக்கு அழிவுவரும் கருமங்களைப் பழைய நட்டோர் செய்தாராயினும் அவரோடு உள்ள அன்புவிடார்: முற்காலத்து அன்பின் வழியாக வந்த நட்பையுடையவர். இது கேடுவருவன செய்யினும் அமைய வேண்டு மென்றது.
பரிமேலழகர் உரை:
அழிவந்த செய்யினும் அன்பு அறார் – நட்டார் தமக்கு அழிவு வந்தவற்றைச் செய்தாராயினும் அவர் மாட்டு அன்பு ஒழியார்; அன்பின் வழிவந்த கேண்மையவர் – அன்புடனே பழையதாய் வந்த நட்பினை உடையார். (‘அழி‘ என்பது முதனிலைத் தொழிற்பெயர். அழிவு – மேற்சொல்லிய கேடுகள். இவை இரண்டு பாட்டானும் கேடு செய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்றன்று என்பது கூறப்பட்டது.)




