HomeUncategorizedThirukural 837 of 1330 - திருக்குறள் 837 of 1330

Thirukural 837 of 1330 – திருக்குறள் 837 of 1330

Thirukural
837 of 1330 –
திருக்குறள் 837 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பேதைமை.
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
Translation:
When fools are blessed with fortune’s
bounteous store,
Their foes feed full, their friends are
prey to hunger sore.
Explanation:
If a fool happens to get an immense
fortune, his neighbours will enjoy it while his relations starve.
கலைஞர் உரை:
அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது.

[ads-post]
மு. உரை:
பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.
மணக்குடவர் உரை:
அயலார் உண்ண, உற்றார் பசியாநிற்பர்; பேதையானவன் பெரிய செல்வத்தை உற்றவிடத்து. இதுபேதை பொருள்பெற்றால் வழங்குந்திறங் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
பேதை பெருஞ்செல்வம் உற்றக்கடைபேதையாயினான் பெரிய செல்வத்தைத் தெய்வத்தான் எய்திய வழி; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர்தன்னோடு ஓர் இயைபும் இல்லாதார் நிறைய,` எல்லா இயைபும் உடைய தமராயினார் பசியாநிற்பர். (எல்லா நன்மையுஞ் செய்துகோடற் கருவி என்பது தோன்றபெருஞ்செல்வம்என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்றஉற்றக்கடைஎன்றும், எல்லாம் பெறுதல் தோன்றஆரஎன்றும், உணவும் பெறாமை தோன்றப்பசிப்பர்என்றும் கூறினார்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments