Homeஅய்யா வழிஅருள் நூல் 2701 - 2730 of 2738 அடிகள்

அருள் நூல் 2701 – 2730 of 2738 அடிகள்

அருள் நூல் 2701 – 2730 of 2738 அடிகள்

arul-nool

சங்கீதம் பாட சகலகலையுந் தொனிக்க
மக்கள் ஓசையேழு வாhத்தியமும் தான்முழங்கக்
கிம்புருடாதி முதல் கின்னாpவா சித்துநிற்க
தம்பூரு வீணைசுரமண்டலம் முழங்கக்
கொலுகொலு வெனத்தெய்வார் குரவைமுழங்கிநிற்க
மலமலென ஆவுநெய்யில் வாடாவிளக்கொpய
அiகு கொலுவிரிக்க ஆலத்தியேந்திநிற்க
ஒழுகு காளாஞ்சி ஒருமித்து வந்துநிற்க
சத்திமுனி பத்திரத்தாள் சாயூச்சமாயிருக்க
இத்தனைப் பண்பும் யிதமுடனே தெய்வார்கள்
பந்தலுக்குள் ளேபரிந்து யிருந்துயெல்லாரும்
கந்தனுக்கு நற்சரடு கற்பிக்க வேணுமென்று
தாயாருடன் பிறந்த தன்மா மனைவருத்தி
காயாம்பூ மேனியனார் கட்டிலொன்று தான்கொடுக்க
அதிலே யிருமெனவும்ட அருகில வரிருக்க
சதிரான வார்த்தையொன்ற தான்செவியி லுமூகி
கோப்புக் குண்டான குருமுறையைத் தான்கொடுத்து
மாப்பிள்ளையும் பெண்ணையும் வருவித்துப் பந்தலிலே
பரம ரகசியமாய் பலகைதணி லேயிருத்தி
அரகரா வென்று அம்மையுமையை தானிணைந்து
சிவசிவா வென்று திருச்சரடு சேர்த்தனரே
தவசி முனியுடனே தானெழுந்து வந்துநின்று
சீதனங்களான சிலவரிசை தான்கொடுத்து
மாதவனை நினைந்து வாழ்த்தினார் பாலர்தனை
சொந்தமாய் உங்களுக்குத் துவரையம் பதியெனவும்
தந்தோ மிலங்கைத் தளவாடம் உள்ளதெல்லாம்
பிள்ளகளே யிந்த  பெரும்புவியை ஆள்வதற்கும்
வெள்ளானை மீதேற விடைதந்தோம் உங்களுக்குத்
ஆனாலும் மக்காள்நீர் ஆளுவீர் ராச்சியத்தை
வானோர் அறியவும்பால் வாழ்த்தினோம நீர்வாழ

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments