Homeகுண்டலகேசிகுண்டலகேசி 16 - 20 of 24 பாடல்கள்

குண்டலகேசி 16 – 20 of 24 பாடல்கள்

குண்டலகேசி 16 – 20 of 24 பாடல்கள்

kundalakesi

16. சீற்றம் செற்றுப்பொய் நீக்கிச் செங்கோலினால்
கூற்றம் காய்ந்து கொடுக்க எனும் துணை
மாற்றமே நவின்றான் தடுமாற்றத்துத்
தோற்றம் தன்னையும் காமுறத் தோன்றினான்.

விளக்கவுரை :

குற்றப்படாத வண்ணம் காத்தல்

17. மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டாதே அன்று வாய்மை
நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டம் தன் மேல் கறையை யார் கறையன்று என்பார்.

விளக்கவுரை :



[ads-post]

ஆதலும் அழித்தலும்

18. மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவது உறும் என்று உரைப்பது நன்று.

விளக்கவுரை :

19. வேரிக் கமழ்தார் அரசன் விடுக என்ற போழ்தும்
தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும்
பூரித்தல் வாடுதல் என்று இவற்றால் பொழிவு இன்றி நின்றான்
பாரித்தது எல்லாம் வினையின் பயன் என்ன வல்லான்.

விளக்கவுரை :

[கீழ்க்காணும் பாடல்கள் குண்டலகேசியின் பாடல்களாக கருதப்படுகின்றன]

குண்டலகேசி பாடிய பாடல்கள்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

20. வெட்டிய கேசத் தோடும் விளங்குசேற்று உடிலனோடும்
முட்டரும் அரையின் மீது முடையுடைக் கந்தை தன்னை
இட்டமாய்த் திரிந்தேன் முன்னாள் இனியதை இன்னா என்றும்
மட்டரும் இன்னா உள்ள பொருளையும் இனுதஎன்றேனே.

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments