Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 1661 - 1680 of 4856 அடிகள்

மணிமேகலை 1661 – 1680 of 4856 அடிகள்

மணிமேகலை 1661 – 1680 of 4856 அடிகள்

manimegalai

1661. ஆங்கு அவர் பசி தீர்த்து அந் நாள் தொட்டு
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின்
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும்
தொக்கு உடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ
பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப
ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன்
பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின்
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி

விளக்கவுரை :

[ads-post]

1671. மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும்
ஆர் உயிர் முதல்வன் தன் முன் தோன்றி
“இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க” என
வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு
எள்ளினன் “போம்” என்று எடுத்து உரை செய்வோன்
“ஈண்டுச் செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்
காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது
அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர்
நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments