Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 1781 - 1800 of 4856 அடிகள்

மணிமேகலை 1781 – 1800 of 4856 அடிகள்

மணிமேகலை 1781 – 1800 of 4856 அடிகள்

manimegalai

1781. ஆங்கு அவன் தன் திறம் அறவணன் அறியும்” என்று
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள்
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும்
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி
“மக்களை இல்லேன் மாதவன் அருளால்
பெற்றேன் புதல்வனை” என்று அவன் வளர்ப்ப
அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின்
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன் தான்
துறக்க வேந்தன் துய்ப்பிலன்கொல்லோ?
அறக் கோல் வேந்தன் அருளிலன்கொல்லோ

விளக்கவுரை :

[ads-post]

1791. சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும்
நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம்
அலத்தல்காலை ஆகியது ஆய் இழை!
வெண் திரை தந்த அமுதை வானோர்
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு
வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும்
அறன் ஓடு ஒழித்தல் ஆய் இழை! தகாது’ என
மாதவன் உரைத்தலும் மணிமேகலை தான்
தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments