Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 2941 - 2960 of 4856 அடிகள்

மணிமேகலை 2941 – 2960 of 4856 அடிகள்

மணிமேகலை 2941 – 2960 of 4856 அடிகள்

manimegalai

2941. ‘கொற்றம் கொண்டு குடி புறங்காத்து
செற்றத் தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும்
தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து
“செருப் புகல் மன்னர் செல்வுழிச் செல்க” என
மூத்து விளிதல் இக் குடிப் பிறந்தோர்க்கு
நாப் புடைபெயராது நாணுத் தகவுடைத்தே
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று
என் எனப் படுமோ நின் மகன் மடிந்தது?
மன்பதை காக்கும் மன்னவன் தன் முன்
துன்பம் கொள்ளேல்’ என்று அவள் போய பின்

விளக்கவுரை :

[ads-post]

2951. கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து
‘வஞ்சம் செய்குவன் மணிமேகலையை’ என்று
அம் சில் ஓதி அரசனுக்கு ஒரு நாள்
‘பிறர் பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன்
கரும்பு உடைத் தடக் கைக் காமன் கையற
அரும் பெறல் இளமை பெரும்பிறிதாக்கும்
அறிவு தலைப்பட்ட ஆய் இழை தனக்குச்
சிறை தக்கன்று செங்கோல் வேந்து!’ எனச்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments