Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 3121 - 3140 of 4856 அடிகள்

மணிமேகலை 3121 – 3140 of 4856 அடிகள்

மணிமேகலை 3121 – 3140 of 4856 அடிகள் 

manimegalai

3121. “யாங்கு ஒளித்தனள் அவ் இளங்கொடி!” என்றே
வேந்தரை அட்டோன் மெல் இயல் தேர்வுழி
நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று
“என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள்
அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள்?
சொல்லுமின்” என்று தொழ அவன் உரைப்பான்
“கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னைப்
பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய்

விளக்கவுரை :

[ads-post]

3131. நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன்
வாகை வேலோன் வளைவணன் தேவி
வாசமயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அந் நாள்
“இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய
கருவொடு வரும்” எனக் கணி எடுத்து உரைத்தனன்
ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது
பூங்கொடி வாராள் புலம்பல்! இது கேள்
தீவகச் சாந்தி செய்யா நாள் உன்
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments