Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 3421 - 3450 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3421 – 3450 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3421 – 3450 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

துட்டக் குணத்தோர் துடியாய் மிகநடந்து
கொட்டங் கீழாகக் குருத்துநின்ற பாதகனை
தட்டு மிகமாறி தலைகீழாய் நின்றவனை
ஈச ரழைத்தார் எழுந்திருந்து வாவெனவே
நீசன் தனையழைக்க நெளிந்தே வுருண்டவனும்
பிரண்டுருளப் பிண்டம் பிசைபிசைந்து தான்மலங்க
மருண்ட விழியால் மாகம துகலங்கி
மண்ணை விட்டுயர மண்டைவர மாட்டாமல்
விண்ணெல்லா மெத்த வெம்மருண்ட தம்மானை
கயிலைக் கிடுகிடெங்கும் கண்டபேர் தாம்பதற
அகிலங் கிடுகிடெங்கும் அழைக்கவந்தோர் தாம்பதற
அரனா ரிடத்தில் அவர்கள்சில ரோடி
சிரமா னதுவெளியில் செல்லவர மாட்டாமல்
பூமி கலங்கிப் பொறுக்கமிகக் கூடாமல்
சாமியந்த நீசன் தான்வரவே மாச்சலுண்டு
என்றந்தத் தூதர் இப்படியே சொல்லிடவே
அன்று சிவனார் அதற்கென்ன செய்வோமென்று
தம்மாலே யாகும் தந்து தெளிந்தெடுத்துக்
கம்மாளன் வேலையினால் கவ்வையொன் றுண்டாக்கி
குத்திப் புறத்தே கோதிவையு மென்றுசொல்லி
எத்திசையும் நந்தி ஈசுவரனார் கைக்கொடுத்து
வேண்டியந்த நந்தி விரைவா யவர்நடந்து
ஊண்டிநின்ற நீசனையும் ஒருகவ்வை யால்கோதி
வெளியிலே வைக்க வெப்பெடுத்த பாதாளம்
பளிரெனவே வந்து பொருந்தியதே யம்மானை
பூமிதனில் வெடித்த பொல்லாத நீசனையும்
சுவாமிமுன் பானதிலே சுரண்டியத னாலிழுத்து
கொண்டுவந்து விட்டார் குருநாதர் முன்பதிலே
கண்டுஅந்த ஈசர் கனமாய் விசேசமுற்று
உன்றனக்கு வேணுமென்று உகந்ததெல்லா மிப்போது

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments