Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 7981 - 8010 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7981 – 8010 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 7981 – 8010 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விருத்தம்

ஒருதிரு விபூதி யுண்டை ஒருயிரு மிச்ச மாகும்
ஓருதிடத் தேங்காய்ப் போலும் ஒருமனத் திரணை போட்டுக்
கருதிட வெற்றிலை பாக்கும் கனிந்திடு வோர்க்கு மூவர்
வருகிட ஞாய மெய்யின் வழியிது வாகுந் தானே

விருத்தம்

மனுமொழி யிதுவா மென்று மதத்துடன் பேசு வோர்க்கு
இனிதல்ல வீண்தா னென்று இயம்பிய பகைஞர் தம்மை
குனிதவள் துர்க்கை சென்று கொன்றவள் நரகம் பூத்தி
கனிதுடன் துர்க்கை வாரி கடல் தீர்த்த மாடுவாளே

வேறு

திருவாசம் – 1

எறும்புகடை யானைமுதல் எண்பத்துநான் குயிர்கள்
எழுகடல் பதினாலு புவிகளும் இரதிமதி சூரியர்கள்
பருதி பாலாழியும் இயல்வானம் வாயு முதலாய்
தெறும்பு மாமலை மாமரச் சோலையும் சேடனுந்
தலைமோடனு மறியவே தென்கீழத் தேவரு
மிங்குள்ள மூவரும் தேசதெய் வேந்திர னறியவே
வாச முனிவோர்களும் வேதசன் னாசியும்
மறையாறு சாஸ்திர மறியவே மண்டல மளந்தகை
கொண்டெழுதும் வாசகம் மண்டலர்க ளெவரு மறியவே சொல்கிறேன்
வறும்பகல் தொளாயிரத்து தொண்ணூற் றெட்டாண்டினில்
வளர்ஸ்ரீ சாம்பசிவ மூர்த்தியும் மகாபரசுராமரும் ஸ்ரீராமசேயரும்
பதியேறும் மூர்த்தியும் வண்மை பார்த்திந்தக்கலி யுகத்தில்
படூரநீ சக்கலியால் வரும்வாறு வண்மையைப் பகர்ந்து
திருவாசக மெழுதிப் பலநூல் அறிந்தவர் எவர் அவர்களும்
பக்தியுட னெக்காலமும் பணிந்துதிரு வாசகத்தை முத்தியணைந்
தோர்க்குமிகுபல னுண்டாம் பகரக்கேளு நத்தியுடன்
பூலோகக் கலியுகா தேசத்தில் நடக்கு முறைதானுங் கேளீர்

வேறு

நல்ல வீரபுரந்தரத் தர்மராசா வங்கிசத்திலே
நாடும் ஒரு மதலை பிறந்து வந்தவுடன் நல்ல அருணாசலத்திலே
வாலிபப் பிள்ளையாயிருக்கிறார். அந்தப்   பூலோகக் கலியுகத்திலே
ஆசாரமாயிருக்கிற பேர்களும் அழுக்கான புத்திமதியா 
இருக்கிற பேர்களும் அவரவர் ஆங்காரமாகியே அலைந்து

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments