HomeUncategorizedசித்தர் யந்திரங்கள்

சித்தர் யந்திரங்கள்

சித்தர் யந்திரங்கள்

ஒலிக்கும் உருவம் உண்டென உணர்ந்த சித்தர்கள், அந்த ஒலியின் மூலமான எழுத்துக்களின் அதிர்வையும், சக்தியையும் தங்களின் தேவைகளுக்கு பயன் படுத்தினர். ஒவ்வொரு எழுத்துக்கும் உண்டான அதிர்வை அல்லது சக்தியினை மற்ற எழுத்துக்களோடு சேர்க்கும் போது சக்தி உருவாக்கம் நடக்கிறது. இதை மந்திரம் என்றனர்.

எழுத்துக்கள் மந்திரங்களாக உருவாக்கும் போது அவை உயிர் பெற்று வருகின்றன. அவை தனது சக்தியால் சுற்றுப்புற சூழலிலும் மனிதர்களிலும் மாற்றங்களை உண்டாக்குகின்றன. ஓம், ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம் போன்ற மந்திரங்கள் முழு மனதுடன் உச்சரிக்கும் போது உடலில் உள்ள அவ்வளவு நரம்புகளிலும் ஒரு அதிர்வு உண்டாவதை அவதானிக்கலாம். இந்த மந்திரங்களை நாங்கள் உச்சரிக்காவிட்டாலும் அவற்றை எழுதிய ஓலை அல்லது தகடை அருகில் வைத்திருப்பதன் மூலம் ஒரு பாதுகாப்பும் நன்மையையும் உண்டாகும்.

எழுத்துக்களைப் போலவே எண்களுக்கும் சக்தி உள்ளது என்றும், எழுத்துக்களையும் எண்களையும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் சக்கரமாக அமைத்து அதற்க்கு உண்டான குறிப்பிட்ட மந்திரத்தை குறிப்பிட்ட அளவில் ஜெபித்தால் அவை தொழிற்பட தொடங்கும் என்பதையும் சித்தர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

நவக்கிரகங்களின் கிரக சாரங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் இஷ்ட தெய்வங்களின் அருளை பெற்றுக் கொள்ளவும், பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து தம்மைச் சூழ்ந்து உள்ளவர்களைக் காக்கவும் சித்தர்கள் எண்களையும் எழுத்துக்களையும் மாறி மாறி இட்டு சக்கரங்களை உருவாக்கினார்கள்.

அவற்றின் மூலம் தாங்கள் அடைந்த பலனையும் சக்கரங்கள் தயாரிக்கும் முறையையும் என்ன சக்கரத்திற்கு என்ன மந்திரம் எத்தனை தடவை சொல்லவேண்டு என்பதையும் அது என்ன என்ன வேலைகளைச் செய்யும் என்பதையும் தங்களின் பாடல்களில் தெளிவாகவே சொல்லிச் சென்றுள்ளனர்.

மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக பயன்படுத்தும் ஒரு ஆயுதம் தான் மந்திரம். அந்த ஆயுதத்தை இயக்கத்திற்கு கொண்டு வரும் ஒரு பொருள் தான் யந்திரம். பொருள் மூலம் இயக்கப்பட்ட ஆயுதம் தன் இலக்கை எவ்வாறு அடைகிறது என்ற சூட்சுமம் தான் தந்திரம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments