குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : மடியின்மை.
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
Translation:
Who fosters indolence within his breast,
the silly elf!
the silly elf!
The house from which he springs shall
perish ere himself.
perish ere himself.
Explanation:
The (lustre of the) family of the ignorant
man, who acts under the influence of destructive laziness will perish, even
before he is dead.
man, who acts under the influence of destructive laziness will perish, even
before he is dead.
கலைஞர் உரை:
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.
[ads-post]
மு.வ உரை:
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.
மணக்குடவர் உரை:
நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி தனக்கு முன்பே கெடும். சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:
மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி – விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் – அவன் தன்னினும் முந்துற அழியும். (அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் ‘பேதை‘ என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் ‘குடி தன்னினும் முந்துற அழியும்‘ என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.)




