Homeஅய்யா வழிஅருள் நூல் 1321 - 1350 of 2738 அடிகள்

அருள் நூல் 1321 – 1350 of 2738 அடிகள்

அருள் நூல் 1321 – 1350 of 2738 அடிகள்

arul-nool

உங்கள் தேவிமார் ஐந்துபேரானாலும்
அவரவர் ஆம்படையானைத் தள்ளியின்னொரு முகம்பார்த்து
பேசவில்லை என்றும்
கொடிமரத்தில் ஐந்துநேரம் சத்தியம் செய்து
நாமம்கொண்டு இடச்சொல்ல
ஆமென்று ஏற்கமாட்டாமல் இருந்ததினாலே
எறும்புமுதல் எண்ணாயிரப்பட்ட
மிருகப்பிறவி செய்திருக்கிறதிலே
வாய்பேசாத மிருகத்தைத்தள்ளி
எந்தெந்தச் சாதிவாய்ப்பேசுமோ
அதிலே ஐந்து ஆணானாலும் ஐந்து பெண்ணானாலும்
இந்தப்படி தானம்பண்ணிச் சத்தியம்செய்து
நாமம்கொண்டிட நொம்பலம் இதமாகப்போக
சீசர்லோகம் தகர்லோகம் இந்த ஒழுங்கைத்
தெரியச்சொல்லவும் இன்னும் கணக்கை நிரம்பியிருக்குது
அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா

இரண்டாவது சட்டம்

என்பள்ளி பள்ளிகள் தோறும் இருக்கிறபள்ளி
கணக்கருக்கு அருளிச்செய்த விபரப்பத்திரம்

மூன்றாவது சட்டம்

என்பள்ளியிலே வந்துஇருக்கிற பலவூர் ஜனங்களுக்கு
அருளிச்செய்த விபரப்பத்திரம்
இந்த சிவகாண்டத்தின் பிரகாரம் அறிவாகவாசித்து
எல்லோருக்கும் அறியும்படியாக வாசிக்க
இன்பமாக கேட்டுக்கொள்ளுங்கள்
நான், தீர்ப்புக்கேட்கும் வேளையிலே
உத்தரம்சொல்லத் திறமையாயிருங்கள்
நாலாம்தீர்ப்புச் சொல்லிவருகிறார் நம்மளையா
ஆகையால் தருமத்தைச்செய்து தவத்தைப்பெருக்கி
உங்கள் சாராசரத்தைத் தேடுங்கள் என்மக்களே
இந்த சிவகாண்டப்பத்திரப் பிரகாரம்
எல்லோரும் போற்றுங்கள்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments