Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 5341 - 5370 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 5341 – 5370 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 5341 – 5370 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சோதியே யெங்கள் துயரமெல்லாந் தீருமையா
இத்தனை நாளும் இருந்தோமொரு மானுவமாய்க்
கொற்றவரே நாங்களினிக் குடியிருக்கப் போகாது
சாதிக்கட்டை யெல்லாம் தலையழித்து மாநீசன்
மேதினிக ளெல்லாம் மேவினா னையாவே
தான மழிந்தாச்சே தம்பியர்கள் சான்றோரின்
மான மழிந்தாச்சே வரம்பெல்லாங் கெட்டாச்சே
பூப்பியமுங் குலைத்துப் புரசியோ டொப்பமிட்டுக்
காப்பிலிய னேதுவினால் கட்டழிந்தார் சான்றோர்கள்
இத்தனை நாளும் யாங்கள்முறை யிட்டதுபோல்
புத்தி தனில்வைத்தால் பொறுக்கஇனிக் கூடாதே
தம்பி சான்றோர்கள் சங்கடத்தைக் கேளாமல்
சம்பி முகம்வாடித் தலைகவிழ்ந் திருப்பதென்ன
மக்களு டதுயரம் மனதிரங்கிப் பாராமல்
பக்கமாய் நீரும் பாரா திருப்பதென்ன
சான்றோர் படுந்துயரம் தானிரங்கிப் பாராமல்
ஆண்டோரே நீரும் அயர்ந்தே யிருப்பதென்ன
இதெல்லா மெங்களைநீர் ஏற்றசான் றோர்பிறப்பாய்
முதலெல்லாஞ் சான்றோருள் முடிந்துவைத்த கண்ணியினால்
பாவியந் தநீசன் படுத்துந் துயரமெல்லாம்
தாவிக் கயிலை சத்தி சிவன்வரைக்கும்
பொறுக்கமிகக் கூடலையே புண்ணிய அய்யாவே
மறுக்க மதைப்பாரும் மனதிரங்கி யெங்களுக்கு
உகத்துக் குகங்கள் ஊழியங்கள் செய்ததெல்லாம்
அகற்றி யருள்தந்த அச்சுதரும் நீரல்லவோ
மக்களா யெங்களையும் வலங்கைவுய்யோர் தாமாக
ஒக்குறவு கெட்டோன் உலகில் படைத்திருந்தால்
இத்தனை பாடும் எங்களுக் கென்றோதான்
புத்திரரா யெங்களையும் பூமிதனில் பெற்றுவைத்து
நாங்கள் படும்பாடு நாரணரே கண்டிலையோ

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments