Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 901 - 930 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 901 – 930 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 901 – 930 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

இரந்து திரியுகின்ற இரப்பனுக் குள்ளபுத்திப்
பரந்த புவியாளும் பாரமுடிக் காவலற்கு
ஏற்குமோ ஞானம் இரப்போருக் கல்லாது
ஆர்க்குமே சொல்லாதே ஆண்டிவுன் ஞாயமதை
சண்டைக்கு வாவெனவே தரங்கூறித் தூதுவிட்டப்
பண்டார மென்ற படைக்கார னும்நீயோ
என்னுடைய சேனை எல்லாமிக அழித்து
என்னையும் நாய்நரிக்கு இடுவேனென் றதும்நீயோ
என்றே யச்சூரன் இயம்பி மிகநகைத்துப்
பண்டார னோடே படையெடுத்தா னம்மானை
சூரனுட படைகள் துண்டந்துண்ட மாய்விழவே
வீரர்களும் வந்து வெட்டினா ரம்மானை
வெட்டிதினால் செத்தார் மிகுசூ ரக்குலங்கள்
பட்டார்க ளென்று பார்சூரன் தான்கேட்டு
வந்து எதிர்த்தான்காண் மாயாண்டி தன்னோடே
இன்றுவந்து வாய்த்துதென்று எம்பெருமா ளுமகிழ்ந்து
வேலா யுதத்தை விறுமா பதஞ்சேவித்து
மேலாம் பரனார் விமல னருளாலே
எறிந்தார்காண் சூரன் இறந்தானே மண்மீதில்
பறிந்தேவே லாயுதமும் பாற்கடலில் மூழ்கியதே
சூரன் மடிந்து துடித்துயிர் போகுகையில்
வீரமுள்ள நாதன் வீணனவன் முன்பில்வந்து
சொன்ன மொழியெல்லாம் சூட்சமாய்க் கேளாமல்
இந்நிலமேல் பாவி இறந்தாயே வம்பாலே
நாட்டமுடன் நானுரைத்த நல்லமொழி கேளாமல்
கோட்டையு முன்னுடைய குஞ்சரமுந் தோற்றாயே
சந்துவிட்ட சொற்படிக்குத் தந்தரசு ஆளாமல்
விந்துக் குலங்களற்று வீணாய்நீ மாண்டாயே
மாளா வரங்கள் மாகோடி பெற்றோமென்று
பாழாக மாண்டாயே பண்டாரங் கையாலே

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments