Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 3991 - 4020 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3991 – 4020 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3991 – 4020 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

குழைவான வேதா குறியா யதையறிந்து
கல்வி யிளகாமல் கற்போ லிருந்ததினால்
பல்லுயிர்கள் வாழும் பாரிலொரு பங்காக
மலையாய் வளர்ந்து வைந்தர் வருகையிலே
அலைபோலிளகி அவனிதனில் பாயவென்று
சபித்தார் காண்வேதா தானறிந்து வேதமது
குபிந்தான மான குன்றுபோலே வளர்ந்து
அன்றந்த வேதம் ஆனதினால் நானடியேன்
இன்றென் சிரசை இதிலிடறி மாண்டதுண்டால்
வைகுண்டங் கிட்டுமென்று மாளவந்தே னிம்மலையில்
கைகண்ட வேதக் கருணாகரக் கடலே
என்றுரைக்க மாமுனிவன் எம்பெருமாள் நல்லதென்று
அன்று முனியை அவரோ டுடன்கூட்டிப்
போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன்
ஏகின்ற வேளை எம்பெருமா ளேதுசொல்வார்
மாமுனியே நீகேளு மாச்சலா யென்னுடம்பு
தாமுனியே யென்றனக்குச் சடைவா யிருக்குதுகாண்
ஆனதால் கங்கைபார்த்(து) அதிலே குளித்துமிகப்
போனால் சுகமெனவே போகனோ டேயுரைத்தார்

சலந்தவசு

அப்போது நல்ல அருள்கொண்ட மாமுனிவன்
இப்போது மாயவரே இதோ தெரியுகின்ற
அருணகிரி மலையில் அருவியொன் றுண்டுமையா
கருணை யிரங்கினதால் காட்டியே தாறேனென்றான்
நல்லதுதா னென்று நல்ல முனியோடே
வல்ல திருமேனி வாவிதனைக் கண்டார்காண்
கண்டு திருமேனி கனத்தநீ ராவிதனில்
சென்றிறங்கி மேனிதனில் செலங்கோரி விட்டிடவே
ஆவி தனிலிறங்கி அச்சுதனார் நின்றிடவே
தேவி யொருபெண் செலமெழுந்து மாயனையும்
வந்து பணிந்திடவே மாயனதைப் பார்த்துச்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments