HomeUncategorizedஅகத்தியர் பன்னிருகாண்டம் 306 - 310 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 306 – 310 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 306 – 310 of 12000 பாடல்கள்

306. தானான சூதமுனி அன்பத்தொன்று
    தாக்கான பிரம்மமுனி இருபத்தொன்று
கோனான கமலமுனி எண்பத்தொன்று
    கொற்றவனே அஷ்ட சூத்திரந்தான்பாரு
வேணான சட்டமுனி பதானாறும்பார்
    வேகமுடன் தன்வந்திரி பதினாறும்பார்
பானான புலிப்பாணி இருபத்தைந்து
    பாங்குடனே பார்ப்பதுவே மெத்த நன்றே.

விளக்கவுரை :

307. நன்றான புலிப்பாணித் திலர்தமப்பா
    நலமாக விருபத்தி யைந்தும்பாரு
குன்றான சோதிட மைம்பதும்பார்
    குறிப்பான புலிப்பாணி பதினாறும்பார்
தன்றான கோரக்க ரெண்பதும்பார்
    தகையுள்ள வால்மீகர் முப்பத்திரெண்டு
அன்றான வரரிடி அன்பதும்பார்
    அழகான யென்னூலு நூறும்பாரே.

விளக்கவுரை :

308. நூறூன சிவராஜ யோகமப்பா
    நுணுக்கமுள்ள கருவிகர ணாதிதோன்றும்
கூறான மச்சமுனி பாரிசாதங்
    கொப்பெனவே முப்பத்தி ரெண்டுமேபார்
நேரான யென்னூலாம் பதினாறும்பார்
    நேர்மையுடன் உட்கருவு வெளியாய்த்தோன்றும்
பாரான கொங்கணவர் சூத்திரந்தான்
    பாங்குபெற முப்பத்தி ரெண்டும்பாரே.
  
விளக்கவுரை :

309. ரெண்டான கமலமுனி சூத்திரந்தான்
    எழிலான பதினாறு சுருக்கமேபார்
துண்டான சூத்திரமாம் நூறுமேபார்
    துப்புரவாய் சட்டமுனி சூத்திரந்தான்
பண்டான அறுபத்து நாலுமேபார்
    பாங்குபெற தேரையர் நூறும்பாரு
உண்டான அன்பத்தி ரெண்டுசூத்திரம்
    உத்தமனே பார்ப்பதுவும் நன்மையாமே.
       
விளக்கவுரை :

310. ஆமேதான் பஞ்சாட்சரந்தான்
    அப்பனே அன்பது சூத்திரம்பா
தாமேதான் பிரம்மமுனி சிவராஜமப்பா
    தக்கான அறுபத்து நாலுமேபார்
நாமேதான் சொன்னபடி எந்தன்னூலு
    நலமான எமகாண்டம் பதினாறும்பார் 
போமேதான் யூகிமுனி சூத்திரந்தன்
    பொங்கமுடனன்பதுமே பார்த்திடாயே.

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments