HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1541 - 1545 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1541 – 1545 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1541 – 1545 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1541. தானான சூடனது பலமேவொன்று தாக்கான சீனமது பலமோகால்தான்
வேனான சாம்பிராணி
பலமோகால்தான் மூக்கான மதியுப்பு பலமோகால்தான்
பானான பூநீறு பலமோகால்தான்
பாங்கான தாழையுப்பு பலமோகால்தான்
கோனான கோரையுட கிழங்குதானும்
குணமான வாடையென்ற  காறமாமே
விளக்கவுரை :
1542. காரமாங் கஸ்தூரி
மஞ்சள்தானும் கருவான ஏலக்காய் தன்னோடொக்க   
வீரமா மிலாக்காயின்
சந்தனந்தான் விரைவான கிளியூறல்பட்டைதானும்
கோரமாம்
பச்சலைக்கிச்சிலிதான் கூட்டி கோமகனே கவனமுடன் வராகன்சேரு
தீரமாம் ஆவினுட
நெய்யில்தானும் தீர்க்கமுடன் தானெரிப்பாய் சாமமெட்டே
விளக்கவுரை :

[ads-post]
1543. எட்டான சாமமது வரைத்தபோது
யெழிலான மெழுகதுபோலாகும்பாரு
வட்டான
பீங்கானுக்கைள்ளேபோட்டு வளமுடனே மேல்பீங்கான் புனுகுபூசி
திட்டான சட்டிதனில்
மணல்தான்கொட்டி திறமுடனன பூங்கானும் நடுவேவைத்து
மட்டான மணலதனைமேலேகொட்டி
மார்க்கமுடன் தானெரிப்பாய் சாமமொன்றே
விளக்கவுரை :
1544. ஒன்றான சாமமது யெரிந்தபோது
வுத்தமே மேற்பதங்க நின்றுமேதான்   
குன்றான பீங்கான்மேல்
தேங்காய்ப்போல பிறைபோல வொளிவதுவாயேறிநிற்கும்
தன்றான தகடதுதான்
வெளியிற்காட்டும் தயவான பூரமது பச்சைப்பூரம் 
பன்றான ராசர்களுக்குகந்த
பூரம் பாரினிலே சித்தர்செய்யும்பூரமாமே
விளக்கவுரை :
1545. பூரமா மின்னமொரு வைப்புகேளு
போக்கான ரத்தமென்ற யாளந்தானும்
வீரமாம்
வேங்கைமரப்பிசினுங்கூட்டி விகற்பமுடன் பழந்தின்னும் வௌவாளெச்சம்
காரமாங் கலைமானின்
ரத்தத்தாட்டி கசகாமல் தாழைமலர் கவசஞ்செய்து
தீரமாஞ்சட்டிக்குள்
பொதிந்துமூடி திட்டமுடன் பூமிதனில் புதைத்திடாயே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments