HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5456 - 5460 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5456 – 5460 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5456 – 5460 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5456. பகரவென்றால் நோய்தீர்ந்த
மாண்பருக்கு பட்சமுடன் மனதுவந்து வுரைக்கக்கேளிர்
நிகரமுடன் நல்லோர்கள்
தம்மையப்பா நிகட்சியுடன் உதாசினங்கள் கூறவேண்டாம்
சிகரமுடன் வுத்தமரைப்
பகடிசெய்து சீறலுடன் அவர்தனையே கொடுக்கவேண்டாம்
சகரமுடன் வுபதேச
வார்த்தைகூறி சட்டமுடன் அவர்பாதம் பணிகுவீரே
விளக்கவுரை :
5457. பனியவே யுந்தமக்கு காட்சிசெய்தும் பாருலகில் வினைதமக்கு ஆளுமாகா
அணிகடவுள் செய்கையினால்
உந்தமக்கு வப்பனே நினைத்தவண்ணம் லபிக்கும்பாரு
துணிவுடனே
காயாதிகற்பங்கொண்டு புதிதான திரேகம்போலாகும்பாரு
மணியான வுபதேசஞ் செய்துமல்லோ
மார்க்கமுடன் வாழ்கவென்று வரமீவாயே
விளக்கவுரை :

[ads-post]
5458. வரமான வரமதுவும்
என்னசொல்வேன் வலையான மார்க்கமது சொல்வேனப்பா
உரமுடைய புலிப்பாணி
மைந்தாகேளு வுத்தமனே யுந்தமக்கு சொல்வேனப்பா  
சிரமான வசியமென்ற
பொடிதானப்பா சிற்பரனே காலாங்கி சொன்னவாக்கு 
வரமதுவும் பொய்யாது
மகிமைமெத்த வண்மையுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே
விளக்கவுரை :
5459. பண்பான பொடியதுவும்
என்னவென்றால் பாங்கான மசானமதில் இறந்துபோன
நண்பான தந்தமது முன்னிரண்டு
நலமான தந்தமதைக் கொண்டுவந்து
திண்பான பிரேதமது
மேலேசாற்றும் திறமான மாலையது பூவின்வாடை  
நண்பான சுட்டதொரு
எலும்புதன்னில் கலங்காமல் சாம்பல்தன்னை எடுத்திடாயே
விளக்கவுரை :
5460. எடுப்பாயே காடாற்று முன்னதாக
எழிலான சாம்பல்தனை எடுத்துமைந்தா
கொடுத்துதே சானமதில்
பறக்குகின்ற துப்புரவாய்த் தும்பிதனை கொண்டுவந்து
படுத்ததொரு
வாத்மஜலந்தானுங்கூட்டி பாங்கான வாடையென்ற காற்றுதன்னில்
அடுத்துமே
பறக்குமாவிலைதானப்பா வப்பனே தான்சேர்த்து எடுக்கநன்றே 
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments